
சர்ச்சிலை ஒரு உணவகத்தில் பார்த்த ஒரு பெண், மிகுந்த வெறுப்புடன் "நான் மட்டும் உன் மனைவியாக இருந்திருந்தால் உன் காஃபியில் விஷத்தைக் கலந்து கொடுத்திருப்பேன்" என்றாள்.
சர்ச்சில் சொன்னார், "அம்மணி, நிலைமை அப்படியானால் நான் அந்த காஃபியை மகிழ்ச்சியுடன் குடித்திருப்பேன்"
இதில் சர்ச்சிலிடம் நாம் எதிர்பார்த்தது கோபம். அது மாறி வரும்போது விழைவது கண்ணியமான நகைச்சுவை.
சிரிப்புக்களை பலவகைப் படுத்தியிருக்கிறர்கள். சில சிரிப்புகள் நம்மையே படுத்தி எடுத்துவிடும். அது வேற விஷயம்.
கடி ஜோக்ஸ், வாழ்வியல் சிரிப்புகள், போலி ஆன்மீகர்கள் சிரிப்பு, அரசியல் சிரிப்பு, சர்தார்ஜி சிரிப்புகள், இப்போது லல்லு சிரிப்புகள், லொள்ளு சிரிப்புகள்..... இது போல பல வகை உண்டு. இதெல்லாம் எதுக்கு... சிரிப்புன்னு சொல்லி எதை சொன்னாலும் சிரித்துவிட்டு போகவேண்டியதுதானே என்கிறீர்களா..... அதுவும் வாஸ்தவம்தான்.
இதெல்லாம் போக 'கொல வெறி சிரிப்பு' (sick jokes) என்றும் ஒரு வகை உண்டு. (sikh jokes இல்லை). இவை சாதாரண சிரிப்புடன் ஒரு வித பதைப்பையும் ஏற்படுத்துபவை. நம்ம ஊர்லே அவ்வளவாக இது கிடையாது என்று நினைக்கிறேன்.
"இன்னும் 5 ஆண்டுகளில் இந்தியாவில் வறுமையை ஒழித்துவிடுவோம்" என்று சுதந்திரம் பெற்றது முதல் நம்ம அரசியல்வாதிகள் சொல்லி வருவதும் இந்த வகையில் சேர்ந்ததுதான். என்னை இந்த வகை சிரிப்பில் இழுத்தது பழைய சிரிப்பு ஒன்று:
-- காட்டுமிராண்டியின் மகன் "அப்பா.. அம்மா உன்னை சாப்பிட கூப்பிடறா....."
இதுபோல சில கொலவெறி சிரிப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொல்லுகிறேன்.

--------------------
டொக்... டொக்...
"யாரது?"
"அம்மா.. உங்க வீட்டுக்காரர் மேலே ரோடுரோலர் எறிடுச்சி.... பாடியை கொண்டு வந்திருக்கோம்"
"நான் குளிச்சிட்டு இருக்கேன். அதை கதவுக்கு அடியில் தள்ளி விட்டுட்டு போங்க..."
---------------------
"சார்... உங்க மேலே காரை ஏத்தியவரை அடையாளம் காட்ட முடியுமா?"
"இல்லை.. ஆனா.. அந்த பொம்பளையின் அட்டகாசமான அந்த சிரிப்பை என்னால் அடையாளம் காண முடியும்..."
---------------------
"அம்மா... அம்மா... அண்ணன் மேலே தீ பிடிச்சி எரியுது.. "
"சரி.. நீ போயி உடனே ஹீட்டரை ஆஃப் பண்ணு. கரண்ட்டை வேஸ்ட் செய்யக்கூடாது."
-----------------------
"இருந்தாலும் அவனுக்கு பயங்கரமான மாறுகண்"
"எப்படி சொல்லுறே''
"பின்னே.. இந்த கண்ணுலே அழுத கண்ணீர்.. அந்த கன்னத்திலே வழியுது பார்"
----------------------
"ஐயோ.. என்னப்பா.. உன்னோட ஒரு கை மெஷின்லெ மாட்டி துண்டாயிடுச்சி... என்ன நடந்தது?"
"ஒண்ணுமில்லே.... நான் இப்படி கையை நீட்டிக்கிட்டே இப்படி திரும்புனேனா.... ஐயோ... இதோ அடுத்த கையும் போயிடிச்சி...."
---------------------
ஆப்பிரிக்க காட்டில் காட்டுவாசிகளிடம் மாட்டிக்கொண்டவனை பெரிய சட்டியில் போட்டு கீழே நெருப்பு வைத்துவிட்டார்கள். அப்போது அங்கே வந்த அவர்களது தலைவனை பார்த்ததும்தான் அவனுக்கு உயிர் வந்தது.
"டேய்.. நீயா.. என்னத்தெரியலியா... உன் கூட ஆக்ஸ்ஃபர்ட்லே படிச்சேனே.... நீ இன்னுமா நரமாமிசம் சாப்பிடறே... நாகரீகமாக மாறலியா?"
"நாங்கள்லாம் இப்போ ரொம்ப நாகரீகமாயிட்டோம்ல. இப்போ உன்னைக்கூட நாங்க ஸ்பூன், ஃபோர்க் வச்சிதான் சாப்பிடப்போறோம்.."
-----------------------
"மேடம்.. உங்க கணவருக்கு புற்றுநோய் இருப்பதை கண்டுபிடித்திருக்கிறேன். இன்னும் ஒரு மாதத்தில் இறந்து விடுவார்..."
"போங்க டாக்டர்... என்னை சந்தோஷப் படுத்த இப்படியெல்லாம் பொய் சொல்லாதீங்க..."
-----------------------

"நேற்றைக்கு பத்தாவது மாடியிலிருந்து நம்ம குமார் விழுந்துட்டான்"
"ஐயோ.. என்ன ஆச்சி.."
"நல்ல வேளையா நேரா கீழே ஒரு வைக்கோல் ஏத்துன வண்டி இருந்தது"
"அப்பாடா.."
"ஆனா.. அதிலே ஒரு கடப்பாரை நீட்டிட்டு இருந்தது"
"ஐயோ.. அப்புறம்?"
"நல்ல வேளையா அது கொஞ்சம் தள்ளிதான் இருந்தது"
"அப்பாடா.. "
"ஆனா... அவனுக்கு நேரா ஒரு பாம்பு இருந்தது"
"ஐயோ.. "
"நல்ல வேளையா அந்த பாம்பு செத்துப்போயிருந்தது"
"அப்பாடா.."
"ஆனா.... அந்த வண்டி நகர ஆரம்பிச்சிடிச்சி... ஏய்.. ஏன் ஓடறே...
-----------------------







