Wednesday, February 28, 2007

முதல் பதிவு



எனது முதல் பதிவை பகவத் கீதையிலிருந்து ஆரம்பிக்க விரும்புகிறேன்.


"ஆயிரக்கணக்கான மனிதர்களுள் யாரோ ஒருவன் மனநிறைவின் பொருட்டு முயலுகிறான்.
முயலுகின்ற பெரு வாய்ப்புள்ளோர்களுள் யாரோ ஒருவன் என்னை உள்ளபடி அறிகிறான்."




"யோக மாயையினால் நன்கு மூடப்பட்டுள்ள நான் எல்லோருடைய அறிவுக்கும் எட்டுவதில்லை.
பிறவாத அழியாத என்னை இந்த மூட உலகம் அறிவதில்லை"




"குந்தியின் புதல்வா, இறுதிக்காலத்தில் எப்பொருளை எண்ணிக்கொண்டு ஒருவன் உடலை உகுக்கிறனோ,
எப்பொழுதும் அப்பொருளை பவிப்பவனாகிய அவன் அதையே அடைகிறான்."




"தூய்மைப் படுத்துபவைகளில் காற்றாகவும், ஆயுதம் பிடித்தவர்களில் ராமனாகவும்,
மீன்களுள் நான் மகரமாகவும், நதிகளுள் கங்கையாகவும் நான் இருக்கிறேன்."

மாத்தி யோசி - 2



என்னக் கொடுமை சரவணன். யார் கண்ணில் படக்கூடாது என்று ஒளிந்து கொண்டு திரிந்தாலும், அவர் வந்து என் எதிரே நிற்பது என்பது எனக்கு வாடிக்கையாகப் போய்விட்டது. வேறே யாரு.. நம்ம அண்ணன் கந்தசாமிதான்.


"என்னா தம்பி. என்ன இப்படி. ஞாயித்துக்கிளமையும் அதுவுமா.... காலங்காத்தாலே...."

"என்னண்ணா இது. சரவணபவனுக்கு உள்ளே இருந்து கேக்குற கேள்வியா இது....."

"சாப்பிடத்தான்னு தெரியுது. ஏன்... வீட்டிலே கஞ்சி ஊத்தமாட்டேனுட்டங்களா? எனக்கு முன்னாலேயே தெரியும், ஒரு நாள் இப்படி நடக்குமின்னு. அடி பலமா.. உங்களுக்கு"

"அதெல்லாம் நீங்க நினைக்கற மாதிரி ஒண்ணுமில்லெ. அம்மா வீட்டுக்கு கொஞ்ச நாளைக்கு போகனுமின்னு சொன்னாங்க. ரெண்டு நாளைக்கு முன்னாலதான் அனுப்பிச்சேன். குறைகால சந்தோசம்தான்."



"சரி சரி வருத்தப்படாதீங்க. என்ன ஆர்டர் பண்ணியிருக்கீங்க? அதையே எனக்கும் சொல்லிடுங்க தம்பி."

"எனக்கு பிடிச்சதெல்லாம் இட்லியும் வடையும்தான். இங்கே வந்தா நான் எப்பவும் அதுதான். உங்களுக்கும் சாப்பிட அதையே சொல்லிடறேன்."

"ஏன் வேற எதையும் சாப்பிட மாட்டீங்களா?"



அடடா. சொந்த செலவில் சூனியம் வச்சிக்கிறது என்பது இதுதான். இனிமேல் சாப்பிட வேற ஏரியாதான் போகணும் போலிருக்கு. யாரு பெத்த பிள்ளையோ.. நம்மளையே சுத்தி சுத்தி வர்றாரு.

"ஏந்தம்பி... வேறே எதையாவது சாப்பிட்டு பாக்கலாமில்லையா..."

"அண்ணே. சாப்பிடும்போது பேசக்கூடாதுண்ணு பெரியவங்க சொல்லியிருக்காங்க. வேணாம். விட்டுடுங்க. அழுதுருவேன்."

"தம்பி... அதான் இட்லி இன்னும் வரலியே. கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கலாம்."

"எனக்கு இட்லிதான் பிடிக்கும். அதனாலேதான் வேற எதையும் பத்தி யோசிக்கறது இல்லை." ரொம்ப கண்டிப்பாக சொல்லிவிட்டேன்.



சொல்லிவிட்டு நாக்கை கடித்துக்கொண்டேன். 'யோசிப்பது' பத்தி நானே ஆரம்பித்து விட்டேன். இது எங்கே போய் முடியுமோ. இன்னிக்கு நான் மவுனவிரதம்.. யாரோடெயும் பேசுறது இல்லெ.. என்று சொல்லி தப்பிக்கவும் முடியாது. கந்தசாமி இதுக்கும் ஏதாவது கணக்கு வைத்திருப்பார்.

"ஒரு பேச்சுக்கு வச்சிக்குவோம். இட்லி இல்லைனா என்ன பண்ணுவீங்க?"

"அப்போ நீங்க சொன்னா மாதிரி 'மாத்தி யோசிச்சி' தோசை சாப்பிடுவேன்."

"இது 'மாத்தி யோசி' இல்லை. காலத்தின் கட்டாயம். யாராயிருந்தாலும் இதைத்தான் செய்வாங்க. இட்லி கிடைக்கும்போதே வேற ஐட்டத்தை யோசிக்கணும். ஒரு வேளை அது இட்லியை விட உங்களுக்கு ரொம்ப பிடிச்சுப் போயிடலாம் இல்லையா."



தொடர்ந்தார் கந்தசாமி. "வீட்டுலே ஆள் இல்லைன உடனே ஓட்டலைத்தானே நினைச்சீங்க. ஏன், வேற மாதிரி யோசிக்கலே?"

"அண்ணே... அந்த மாதிரி முறை தவறி போற ஆள் நானில்லை."

"தம்பி, நான் அப்பிடி சொல்லலை. அப்பிடி சொல்லமாட்டேன் என்பதும் உங்களுக்கு தெரியும். நான் சொல்வது என்னன்னா, நீங்களே லைட்டான ஐட்டம் எதையாவது செய்ய முயற்சி செய்யலாமில்லையா? எத்தனையோ ready to use பொருட்கள் கிடைக்குதே."

"ஆமாண்ணே. இது எனக்கு தோணாமலே போயிடுச்சே. என்ன இருந்தாலும் இங்கத்தி டேஸ்ட் வருமா?"

"கொஞ்ச நாள்லே பழகிடுமே. ஒண்ணு சமையல் நல்லா வரலாம். அல்லது அந்த கொடுமையே உங்களுக்கு பழகிடலாம். எப்படீன்னாலும்... காசு மிச்சம்தானே."



"ஆமா கந்தசாமி அண்ணே. நீங்க சொல்லறதும் சரிதான். செலவு அத்துக்கிட்டு போகுது. ஆனாலும் நீங்க சொல்லுறதுலேஒரு சிக்கல் இருக்கு. ஒரு வேளை சமையல் நல்லா பழகிடுச்சின்னா நம்ம கையிலே கரண்டியைக் கொடுத்துடுவாங்களே."

"ஆமா தம்பி. இது யோசிக்க வேண்டிய விசயம். எதுக்கும் ஒரு பாதுகாப்பாத்தான் இருந்துக்கணும். நம்ம வீட்லேயும் ஒரு மார்க்கமாத்தான் இருக்காக. இருந்தாலும் இதுக்கும் 'மாத்தி யோசி' போட்டுட வேண்டியதுதான்.

ஆஹா. இனிமேலும் பொறுப்பதில்லை. "அண்ணே. இட்லி வந்திடுச்சி. இனிமே பேசக்கூடாது. அப்புறம் ஒண்ணு... நான் சாப்பிட்டு முடிச்சதும் மௌன விரதம் ஆரம்பிக்கப் போறேன். யாரோடயும் பேசறது இல்லை."



"அதனாலே என்ன தம்பி. நீங்க பேசாம இருங்க. நான் பேசிட்டே இருக்கேன். பல விசயங்களை உங்களுக்கு சொல்லணுமில்லையா."

"அய்யோ அண்ணே... நான் சொன்னதை நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க... நான் இன்னிலிருந்து 'கேட்கா விரதம்'னு புதுசா ஆரம்பிக்க போறேன். யார் பேசுவதையும் கேட்கக்கூடாது."

"பரவாயில்லை தம்பி. இதுக்கும் மாத்தி யோசிச்சா வழி கிடைக்கும்.... ஐயோ தம்பி... என்ன தம்பி... மிளகாயை கடிச்சிட்டீங்களா..... கண்ணுலே இருந்து தண்ணியா வடியுது?... ஏன் உடம்பெல்லாம் குலுங்குது?"




A pattern may persist because it is useful and adequate and yet a restructuring of the pattern could give rise to something very much better.



The natural inclination is to search for alternatives in order to find the best one. In lateral thinking however the purpose of the search is to loosen-up rigid patterns and to provoke new patterns.



----- Edward De Bono

மாத்தி யோசி - 1



ஒரு நாள் நண்பர் கந்தசாமி கேட்டார் "தம்பி.. தினமும் ஆபிஸுக்கு எப்படி போறீங்க?"


நான் சொன்னேன் "ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் ப்ளஸ். புதுசு. லிட்டருக்கு 80 கிலோ மீட்டர் கொடுக்குது. நம்ம ரெண்டுபேரும்தானே போய் வாங்கியாந்தோம்."

"நான் அதைக் கேக்கலே. எந்த ரூட்லே வருவீங்க"

"அசோக் பில்லர் வந்து, பிறகு பவர் ஹவுஸ், ஆர்காட் ரோடு, லயோலா, காலேஜ் ரோடு, பாந்தியன் ரோடு பிறகு சிந்தாதிரிபேட்டை."

"வேறே எதும் ரூட் உண்டா?"

"இந்த வழியிலே டிராபிக் ஜாமாகி இருக்குண்ணு மிர்ச்சி சுசித்ரா சொன்னாங்கண்ணா, வேற ரூட்."

"எந்த வழி?"

"அயோத்யா மண்டபம், துரைசாமி சப்வே, ஜி என் செட்டி சாலை, அண்ணா சாலை, சிம்ப்சன்."




"வேறே ரூட் உண்டா?"

"என்னண்ணா வெளையாடறீங்க. வேற வழி எதுக்கு. இந்த ரெண்டு வழியுமே நல்லா இருக்கு. சீக்கிரமாவும் போயிடலாம், சில நாட்களைத் தவிர."

"இல்லை. சும்மாவாச்சும் வேற வழியை யோசிச்சிருக்கீங்களா?"

"அதுக்கு அவசியமில்லையே. இப்போ எனக்கு இந்த வழிகள் ரொம்ப பழக்கமாயிட்டது. வீட்டுலே வண்டியை எடுத்தேன்னா, வண்டி ஆட்டோமேட்டிக்கா ஆஃபிஸ் வந்து சேர்ந்துடும். பல சமயங்களிலே எந்த வழியிலே வந்தேன், எந்த சிக்னல்லே நின்னேன் என்பது எனக்கே தெரியாது. ஒருவிதமான reflex energyலே வந்துருவேன்"




"அப்போ உங்க மனசுலே என்ன நினைச்சுட்டு இருப்பீங்க?"

"அது எனக்கே தெரியாது. சில சமயங்கள்லே இடிக்கறமாதிரி போறவனை மனசுக்குள்ளே திட்டியிருப்பேன். இடது பக்கம் ரொம்ப சாஞ்சிட்டு போற கர்ப்பமான ப்ஸ்ஸை பார்த்து கொஞ்சம் கலவரமாயிருக்கும். வேற ஒண்ணும் விசயமிருக்காது. பெரும்பாலான நாட்கள்லே வந்து சேரும்போதே சோர்வாக இருக்கும். பாதி தூக்கமே வந்துடும்னா பாருங்களேன்"

"அதுக்கெல்லாம் காரணம், நீங்க உங்க மூளையை தூங்க வச்சிடறீங்க தம்பி. மூளையை யோசிக்கவே விடறதில்லையே. எல்லாமே reflexலேயே போயிட்டா மூளையிலே ஒட்டடை படிஞ்சுடும்"




"அதுக்கு நான் என்னண்ணா செய்யச் சொல்லுறீங்க"

"வழக்கத்தை விட்டு வெளியே வரணும். புதுப்புது வழிகளில் போக முயற்சி செய்யணும். சமயத்துலே அதுவே ரொம்ப வசதியான ரூட்டா கூட இருக்கலாம். அப்படி போகும்போது புதுப்புது காட்சிகளை பார்க்கலாம். புதுப்புது மனிதர்களை காணலாம். மூளை உங்க வசமிருக்கும். இந்த வழக்கமெனும் சோம்பல் நீங்கும். மனசும் சுறுசுறுப்பாயிருக்கும்"

"ஆஹா... என்னண்ணா இது... லேகியம் விக்கிறவனெப் போலெ ஆரம்பிச்சுட்டீங்க. சரி, ஆஃபீஸ் போற சாதாரணமான விசத்துக்கு இவ்வளவு மெனக்கெடனுமா?"




"இது சும்மா ஒரு உதாரணத்துக்குதான் தம்பி. இந்த மாதிரி வாழ்க்கையின் எல்லா விசயங்களுக்கும் இந்த மாதிரிதான் யோசிக்கப் பழகணும்."

"அப்புறமா கீழ்பாக்கத்துலே ரூம் போட்டுடவேண்டியதுதான். ஆமா... இதெல்லாம் என்னண்ணா? உங்களுக்கு என்ன ஆச்சி? நீங்க எப்போவும் இப்படித்தான் யோசிப்பீங்களா?"

"இப்படி யோசிக்கதான் முயற்சி செய்யறேன். இது மாதிரி யோசிக்கிறதுக்கு 'மாத்தி யோசி'ன்னு பெயர் சொல்லலாம்."

"மாத்தி... யோசியா... ஆரம்பிச்சுட்டாருய்யா.... இது பாய்ஸ் படத்துலே வர்ற பாட்டு மாதிரியில்லே இருக்கு"



"அதேதான். இதைத்தான் ஆங்கிலத்துலே lateral thinking னு சொல்லுவாங்க. இந்த மாதிரி யோசிக்கறது முதல்லே வித்தியாசமாயிருந்தாலும் போகப்போக இதுவே பழக்கமாயிடும். இதைப்பத்தி பிறகு விரிவாக சொல்லுறேன். நாளைக்குப் பாக்கலாம்."

"நான் இப்போவே மாத்தி யோசிக்கப்போறேன். நண்பனை மாத்தினா என்னண்ணு ரொம்ப தீவிரமா யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். இருக்கற இத்தீனி மூளையையும் கொழப்பி கொழம்பு வைக்க நான் தயாரில்லே. வர்ட்டா....."



Lateral thinking is about changing patterns



While acknowledging the usefulness of the patterns created by mind one uses lateral thinking to counter arrogance and rigidity.


----- Edward De Bono

சீனாவில் ஒரு ஈஸ்வரன்



சீனாவில் ஒரு ஈஸ்வர்


சீனாவில் உள்ள ஒரு கோவிலைப்பற்றிய ஒரு பகுதியை படிக்கக் கிடைத்தது. அதில் உள்ள இறைவனின் பெயர் “அவலோகிதேஸ்வர்”.

அந்த ஈஸ்வர பெயருக்கு என்ன அர்த்தமோ. ஆனால் அது புத்தரை குறித்தது என்பது கண்கூடு.

அந்த விக்கிரகத்தைக் கண்டவுடன் நமக்கு தோன்றுவது, அந்த சாந்தமே வடிவான முகத்தைக்கண்டு நமக்கும் மன அமைதியா? …. அல்லது… அந்த ஆயிரம் கைகளைக் கண்டு அச்ச உணர்வா? …அல்லது… சிலையின் அழகைக் கண்டு ஆனந்த பிரமிப்பா?

எதுவானாலும் அந்த சிலையை வடித்தவர் இறையருள் பெற்றவராகத்தான் இருக்கமுடியும். இதுவே நமது ஊராக இருந்தால் முக்கால பூஜைகளும், திருவிழாக்களும் நடந்திருக்கும். பாவம் சீனாவாகப் போய் விட்டது. (நம்ம ஊரிலும் அநாதையாக விடப்பட்ட விக்கிரகங்கள் நிறைய என்பது வேறு விசயம். J)

என்ன செய்ய. எந்த ஊரில் எந்த கடவுளாக இருப்பது என்பதை நிர்ணயிக்க அந்தந்த இறைவனுக்கே குடுப்பினை வேண்டுமோ?



Temple in Sichuan Province



Buddhism first arrived in China during the Later Han dynasty and quickly took root, spawning temples like this one to Avalokitesvara.

The Communists eliminated organized religion when they took power in 1949, and most temples were converted to secular uses.

The constitution of 1978 restored some religious freedoms, and Christian and Buddhist groups are now active in China.