
ஒரு நாள் நண்பர் கந்தசாமி கேட்டார் "தம்பி.. தினமும் ஆபிஸுக்கு எப்படி போறீங்க?"
நான் சொன்னேன் "ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் ப்ளஸ். புதுசு. லிட்டருக்கு 80 கிலோ மீட்டர் கொடுக்குது. நம்ம ரெண்டுபேரும்தானே போய் வாங்கியாந்தோம்."
"நான் அதைக் கேக்கலே. எந்த ரூட்லே வருவீங்க"
"அசோக் பில்லர் வந்து, பிறகு பவர் ஹவுஸ், ஆர்காட் ரோடு, லயோலா, காலேஜ் ரோடு, பாந்தியன் ரோடு பிறகு சிந்தாதிரிபேட்டை."
"வேறே எதும் ரூட் உண்டா?"
"இந்த வழியிலே டிராபிக் ஜாமாகி இருக்குண்ணு மிர்ச்சி சுசித்ரா சொன்னாங்கண்ணா, வேற ரூட்."
"எந்த வழி?"
"அயோத்யா மண்டபம், துரைசாமி சப்வே, ஜி என் செட்டி சாலை, அண்ணா சாலை, சிம்ப்சன்."
"வேறே ரூட் உண்டா?"
"என்னண்ணா வெளையாடறீங்க. வேற வழி எதுக்கு. இந்த ரெண்டு வழியுமே நல்லா இருக்கு. சீக்கிரமாவும் போயிடலாம், சில நாட்களைத் தவிர."
"இல்லை. சும்மாவாச்சும் வேற வழியை யோசிச்சிருக்கீங்களா?"
"அதுக்கு அவசியமில்லையே. இப்போ எனக்கு இந்த வழிகள் ரொம்ப பழக்கமாயிட்டது. வீட்டுலே வண்டியை எடுத்தேன்னா, வண்டி ஆட்டோமேட்டிக்கா ஆஃபிஸ் வந்து சேர்ந்துடும். பல சமயங்களிலே எந்த வழியிலே வந்தேன், எந்த சிக்னல்லே நின்னேன் என்பது எனக்கே தெரியாது. ஒருவிதமான reflex energyலே வந்துருவேன்"
"அப்போ உங்க மனசுலே என்ன நினைச்சுட்டு இருப்பீங்க?"
"அது எனக்கே தெரியாது. சில சமயங்கள்லே இடிக்கறமாதிரி போறவனை மனசுக்குள்ளே திட்டியிருப்பேன். இடது பக்கம் ரொம்ப சாஞ்சிட்டு போற கர்ப்பமான ப்ஸ்ஸை பார்த்து கொஞ்சம் கலவரமாயிருக்கும். வேற ஒண்ணும் விசயமிருக்காது. பெரும்பாலான நாட்கள்லே வந்து சேரும்போதே சோர்வாக இருக்கும். பாதி தூக்கமே வந்துடும்னா பாருங்களேன்"
"அதுக்கெல்லாம் காரணம், நீங்க உங்க மூளையை தூங்க வச்சிடறீங்க தம்பி. மூளையை யோசிக்கவே விடறதில்லையே. எல்லாமே reflexலேயே போயிட்டா மூளையிலே ஒட்டடை படிஞ்சுடும்"
"அதுக்கு நான் என்னண்ணா செய்யச் சொல்லுறீங்க"
"வழக்கத்தை விட்டு வெளியே வரணும். புதுப்புது வழிகளில் போக முயற்சி செய்யணும். சமயத்துலே அதுவே ரொம்ப வசதியான ரூட்டா கூட இருக்கலாம். அப்படி போகும்போது புதுப்புது காட்சிகளை பார்க்கலாம். புதுப்புது மனிதர்களை காணலாம். மூளை உங்க வசமிருக்கும். இந்த வழக்கமெனும் சோம்பல் நீங்கும். மனசும் சுறுசுறுப்பாயிருக்கும்"
"ஆஹா... என்னண்ணா இது... லேகியம் விக்கிறவனெப் போலெ ஆரம்பிச்சுட்டீங்க. சரி, ஆஃபீஸ் போற சாதாரணமான விசத்துக்கு இவ்வளவு மெனக்கெடனுமா?"
"இது சும்மா ஒரு உதாரணத்துக்குதான் தம்பி. இந்த மாதிரி வாழ்க்கையின் எல்லா விசயங்களுக்கும் இந்த மாதிரிதான் யோசிக்கப் பழகணும்."
"அப்புறமா கீழ்பாக்கத்துலே ரூம் போட்டுடவேண்டியதுதான். ஆமா... இதெல்லாம் என்னண்ணா? உங்களுக்கு என்ன ஆச்சி? நீங்க எப்போவும் இப்படித்தான் யோசிப்பீங்களா?"
"இப்படி யோசிக்கதான் முயற்சி செய்யறேன். இது மாதிரி யோசிக்கிறதுக்கு 'மாத்தி யோசி'ன்னு பெயர் சொல்லலாம்."
"மாத்தி... யோசியா... ஆரம்பிச்சுட்டாருய்யா.... இது பாய்ஸ் படத்துலே வர்ற பாட்டு மாதிரியில்லே இருக்கு"
"அதேதான். இதைத்தான் ஆங்கிலத்துலே lateral thinking னு சொல்லுவாங்க. இந்த மாதிரி யோசிக்கறது முதல்லே வித்தியாசமாயிருந்தாலும் போகப்போக இதுவே பழக்கமாயிடும். இதைப்பத்தி பிறகு விரிவாக சொல்லுறேன். நாளைக்குப் பாக்கலாம்."
"நான் இப்போவே மாத்தி யோசிக்கப்போறேன். நண்பனை மாத்தினா என்னண்ணு ரொம்ப தீவிரமா யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். இருக்கற இத்தீனி மூளையையும் கொழப்பி கொழம்பு வைக்க நான் தயாரில்லே. வர்ட்டா....."
Lateral thinking is about changing patterns
While acknowledging the usefulness of the patterns created by mind one uses lateral thinking to counter arrogance and rigidity.
----- Edward De Bono

2 comments:
டெஸ்ட்
கொடுமைங்க. இவ்ளே நல்லா எழுதி இருந்தும் ஒரே ஒரு பின்னூட்டம்தானானு பார்த்தா அதுவும் நீங்க செய்த டெஸ்ட்ன்னு தெரியுது. சே... நல்லதுக்கே காலம் இல்லீங்க. நிஜமாகவே நன்றாக எழுதுகிறீர்கள். தொடர வாழ்த்துக்கள்.
Post a Comment