Sunday, March 4, 2007

மாத்தி யோசி - 3



ஞாயிற்றுக் கிழமையும் காலையும் அதுவுமாக கந்தசாமி வேகமாக என் வீட்டைப் பார்த்து வருவது ஜன்னல் வழியே தெரிந்ததும் கலவரமாகி விட்டேன். இருந்தாலும் என்ன செய்ய. நாலாவது மாடியிலிருந்து குதிக்கவா முடியும். இதுதான் ambush warfare என்பதா?


"வாங்க.. வாங்க.. என்ன இவ்வளவு தூரம்.... சொல்லியிருந்தா நானே வந்திருப்பேனே?"

"சும்மா சொல்லாதிங்க தம்பி. வாங்கின 5000 ரூபாயை போன வாரமே கொண்டுவந்து தர்றதா சொன்னீங்க. இது வரை வரல்ல. அதான் உங்க வீட்டு காலண்டர் சரியாத்தான் இருக்காண்ணு பாத்துட்டுப் போகலாமுன்னு வந்தேன்.. ஹி.. ஹி.."

"சரீ.. சரீ.. உங்க நக்கல் புரியுது. என் நிலமை அப்படி. கோயிச்சுக்காதீங்க."

"சரி விடுங்க தம்பி. இன்னும் ரெண்டு நாளையிலே கொடுத்துடுங்க."



"தம்பி, அது என்ன பல வண்ணத்துலே சின்ன சின்ன கட்டைகளா இருக்கு. எடுங்க பாப்போம்."

"அது பையன் கொண்டாந்து வச்சிருக்கான். எதுக்குண்ணு தெரியலே. இதே வேலயாப் போச்சி. கிருக்குப்பய மவன்"

"உங்க பையனாச்சே.... அதுலே நாலு கட்டையை எடுங்க. ஒரு விளையாட்டு இருக்கு."

"சரி வாங்க. சும்மா சீரியலை பாத்து அழுதுட்டிருக்கிற கொடுமைக்கு.. உங்க கூட பேசிட்டு இருக்கலாம். என்னண்ணு சொல்லுங்க. கட்டையை எடுத்து ஒண்ணொண்ணா பக்கத்து வீட்டிக்காரர் சொட்டத்தலையிலே போடணுமா.."



கந்தசாமி சீரியசாகி விட்டார். "தம்பி, உங்க fantasyலே நான் தலையிட மாட்டேன். வாங்க... இந்த நாலு வண்ண கட்டைலே சிவப்பு, நீலம் இரண்டையும் ஒண்ணை ஒண்ணு தொடுர மாதிரி வைங்க பாக்கலாம்."



"இதோ வச்சிட்டேன். சரியா?"

"சூப்பர். இப்போ அந்த பச்சை நிற கட்டையை எடுத்து, சிவப்பு, நீலம் ரெண்டையும் தொடற மாதிரி வைங்க பாக்கலாம்.."

கொஞ்ச நேரம் யோசித்து பிறகு கண்டுபிடிதேன். "என்னுடைய மூளைக்கு தகுந்த மாதிரி சொல்லத் தெரியலியே உங்களுக்கு. இது சொத்தை மேட்டர்" என்று சொல்லிவிட்டு சரியாக வைத்து விட்டேன்.



"ரொம்ப சரி. இப்போ அடுத்த ஆரஞ்சு கட்டையை எடுத்து, முந்தைய மூணு கட்டையையும் தொடற மாதிரி வைங்க... முடியுமா..."

இப்போது சிக்கல்தான். எப்படி வைத்தாலும் ஏதாவது இரண்டு கட்டைகளைத்தான் தொடுகிறது. மூளையை போட்டு குழப்பிக்கொண்டிருந்தேன்.

"என்ன தம்பி... முடியலையா?"

இது என்னோட ஈகோவை தொட்டது. "இல்லெ.. இந்தமாதிரி புதிர்லாம் நான் ரொம்ப ஈசியா போட்டுருவேன். இன்னைக்கு கொஞ்சம் தலையை வலிக்கற மாதிரி இருக்கு. நாளைக்கு பாக்கலாமா?"

அப்போது விளையாடி விட்டு வந்த என் பையன் "என்ன அங்கிள்.. இது என்ன விளையாட்டு? நானும் வரலாமா?" என்றான்.

கந்தசாமி விளக்கினார். பையன் கட்டைகளையே பார்த்துக் கொண்டிருந்தவன், சடாரென்று ஆரஞ்சு கட்டையை எடுத்து மற்ற மூன்று கட்டைகளின் மேல் வைத்து "சரியா அங்கிள்?" என்றான். கந்தசாமி கைதட்டினார்.



"இது தப்பாட்டம். ஏமாத்தறீங்க. நான் ஒத்துக்கமாட்டேன். கட்டையை மேலே வைக்கலாம்னு சொல்லலியே.."

"மேலே வைக்கக்கூடாதுன்னு சொன்னேனா? நீங்களா ஏன் ஒரு கற்பனையான வரைமுறை வைச்சிக்கிட்டீங்க? இதனால உங்க மூளை குண்டுச் சட்டிக்குள்ளே குதிரை ஓட்டிக்கிட்டு இருக்கு.. இப்போ இன்னொரு விளையாட்டு... வர்ரீங்களா... இல்லேன்னா உங்க பையனோட விளையாடட்டுமா?"

மீண்டும் என் ஈகோவுக்கு சவாலா? "அவன் ஏதோ ஃப்ளூக்ல ஒரு தடவை சரியா சொல்லிட்டான். மத்தபடிக்கு அவன் என்னளவுக்கு வரமுடியாது. அவன் அவங்கம்மா மாதிரி.. சரி வாங்க விளையாடலாம்.."

கந்தசாமி ஒரு பேப்பரை எடுத்து புள்ளிகள் வைத்தார். "இப்போ இந்த ஒன்பது புள்ளிகளையும் கையை எடுக்காமல், நாலே நாலு நேர் கோடுகளால் இணைக்கணும். செய்யுங்க பாப்போம்.."



சரியாக என்னை என் பையன் முன்னாடி மாட்டிவிட்டுட்டார் கந்தசாமி. அவன் மூஞ்சியிலே ஒரு மாதிரியான சிரிப்பு வேறே. நம்மளை பெரிய லூசுன்னுல்ல நெனச்சிடுவான். இந்த சவால்ல ஜெயிச்சே காட்டிடணும்.

"கந்தசாமிண்ணே.. இப்போதான் ஞாபகம் வந்தது. கரண்டு பில் கட்டணும். இன்னைக்கு கடைசி நாள். இந்த விளையாட்டெ நாளைக்கு வச்சிக்கலாமா?"

"அப்பா.. நேத்திக்கே அம்மா கட்டியாச்சி... இந்த விளையாட்டுக்கு விடை சொல்லுங்க... ஓடாதிங்க..." என்றான் தவமிருந்து பெற்ற அருமை வாரிசு.

"எங்கே... நீங்க சொல்லுங்க பாப்போம்..." பதிலுக்கு சவால் விட்டேன்.

கந்தசாமி சிரித்துக் கொண்டே சுலபமாகக் கோடு போட்டுவிட்டார்.



"கோடு ஏன் வெளியிலே போகுது. தப்பு. தப்பு. இது சீட்டிங். நான் ஒத்துக்க மாட்டேன்.."

"கோடு வெளியே போகக்கூடாதுண்ணு ஒண்ணும் கண்டிசன் இல்லையே. நான் முன்னே சொன்ன மாதிரி, இல்லாத வரைமுறைகளை நீங்களாக கற்பனை செய்யக்கூடாது. அது உங்கள் யோசிக்கும் திறனை ஒரு குறுகிய கட்டத்துக்குள் அடக்கி விடும்."



"இப்போ எனக்கு ஒண்ணு ஞாபகத்துக்கு வருது. எங்க ஊர்ல ஒருத்தர் பந்தயம் வச்சாரு. தேங்காய மேலே தூக்கிப்போட்டு, அது கீழே வரும்போது குடுமியை சரியாக பிடிக்கணும்னு. பந்தயத்துலே ஒருவன் ஜெயிச்சுட்டான். எப்படி?... தூக்கிப்போட்ட தேங்காய் கீழே வரும்போது பக்கத்துலெ இருந்தவன் குடுமியை பிடிச்சுட்டான்.. யார் குடுமியைன்னு சொல்லலியே... அது போலத்தானா இதுவும்...?"

"ஒரு வகையிலே அப்படியும் வச்சுக்கலாம். சரி மிச்சத்தை நாளைக்கு வச்சிக்கலாம்"

நாளைக்குமா... நாளைக்கு வெளியூர் எங்கேயும் போகலாமா... இல்லைன்னா.. ஆஃபிசுக்குள்ளெயே தங்கிடலாமா என்று யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.



In dealing with situations or problems, many things have to be taken for granted. In order to live at all, one must be making assumptions, all the time. Yet each of these assumptions is a cliche pattern which may be restructured to make better use of available information. In addition, the restructuring of more complex patterns may prove impossible, unless one breaks through some assumed boundary.


------- Edward De Bono.

6 comments:

Guhan M. said...

pudhiya thathuvam 10,040. good subject to discuss about. the 1st one was very simple. the second one is a very famous IQ test question for which very people actually know the correct answer. now answer this if you can:

"two ropes of different lengths and made of different materails are available such that when ignited independently, both of them get burned out in exactly 1 hour. you are not provided with any sort of measuring devices. using the information given above, you have to measure '45 minutes of time'. how?" reply me if you are unable to follow the words of edward de bono.

ராஜநாகம் said...

நன்றி குகன்.

45 நிமிடங்களை அளப்பதற்கும், கயிறு எரிவதற்கும் தொடர்பு இல்லை. 45 நிமிடங்களை ஒரு கடிகாரம் கொண்டு அளந்துவிடலாம். சரியா?

Guhan M. said...

thavaru.... you have to "measure 45 minutes" using the single statement that "the two ropes are of different lengths and both of them burn out completely in 1hr when ignited independently".... mind the statement "you are not provided with any sort of measuring devices". a watch is a device for measuring time.

Hint: the time taken by the ropes to get burned is an important consideration for the problem. mathi yosi....

ராஜநாகம் said...

ஏதாவது ஒரு கயித்தை எடுத்து, அதை நாலா மடிச்சி, அதிலெ மூணு மடிப்பை எடுத்துக்கணும். சரியா?.

Guhan M. said...

enna oru buthisaalithanam!!! correct answer.... rendu gram thangatha allunga!!!

another method: ignite both the ends of 1 rope and one end of the second rope simulataneously. the first rope burns from both directions towards the center and will completely burn out in 30 mins. at that time, the second rope would have burned to its center. at that instant, ignite the the other end of the second rope. the rope will burn from its center and and the other end and will burn out in 15 minutes. therefore, 30+15=45 minutes

Vijay said...

ராஜ நாகம் சார், இந்த ரெண்டு வழியையுமே யோசிட்டேன் என்கிற வகையிலே சந்தோஷமே. ஆனாலும் எல்லா நேரத்திலும் வொர்க் அவுட் ஆகறது இல்ல. சமயத்துல சிம்புள் விஷயமே தலைய சுத்த வைக்குது. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் சில முயற்சிகளில் பலன் இல்லனா அப்பிடியே விட்டுட்டு அப்புறமா வேற ஒரு சமயத்துல முயற்சி பண்ணா சக்சஸ் பர்சண்டேஜ் அதிகம்.